பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்273


             தேவநிலை அறிதல்

தன்னுள் விளங்கிய சம்புவைக் காணாது
     மன்னும் தலத்தெய்வதென்? குதம்பாய்
     மன்னும் தலத்தெய்வதென்?
182
  
இருந்த இடத்தில் இருந்தே அறியாமல்
     வருந்தித் திரிவதென்னோ? குதம்பாய்
     வருந்தித் திரிவதென்னோ?
183
  
காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்
     ஈசனைக் காணுவையோ? குதம்பாய்
     ஈசனைக் காணுவையோ?
184
  
பூவதில் நாளும் பொருந்தித் திரியினும்
     தேவனைக் காணுவையோ? குதம்பாய்
     தேவனைக் காணுவையோ?
185
  
உள்ளங்கால் வெள்ளெலும்பாக உலாவினும்
     வள்ளலைக் காணுவையோ? குதம்பாய்
     வள்ளலைக் காணுவையோ?
186
  
போரினில் ஊசி பொறுக்கத் துணிதல்போல்
     ஆரியன் தேடுதலே குதம்பாய்
     ஆரியன் தேடுதலே.
187
  
சாதனை யாலே தனிப்பதஞ் சேரார்க்கு
     வேதனை யாகுமடி குதம்பாய்
     வேதனை யாகுமடி.
188
  
வேதனை நீங்கி விடாது தொடர்ந் தோரே
     நாதனைக் காணுவர்காண் குதம்பாய்
     நாதனைக் காணுவர்காண்.
189
  
நாடில் வழக்கம் அறிந்து செறிந்தவர்
     நீடொளி காணுவரே குதம்பாய்
     நீடொளி காணுவரே.
190