தொல்லைச் சடம்விட்டுச் சுட்ட சடம்கொண்டோர் எல்லையில் வாழ்வாரடி குதம்பாய் எல்லையில் வாழ்வாரடி. | 173 |
| | |
தோற்பையை நீக்கிநற் சோதிப்பை கொண்டவர் மேற்பைநஞ் சுண்பாரடி குதம்பாய் மேற்பைநஞ் சுண்பாரடி. | 174 |
| | |
மாற்றினை ஏற்ற வயங்கும்நெடி யோர்களே கூற்றினை வெல்வாரடி குதம்பாய் கூற்றினை வெல்வாரடி. | 175 |
| | |
தலங்களிவை எனல் கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு ஏயும் பலன் வருமோ? குதம்பாய் ஏயும் பலன் வருமோ? | 176 |
| | |
சித்தத் தலம்போலத் தெய்வம் இருக்கின்ற சுத்தத் தலங்களுண்டோ? குதம்பாய் சுத்தத் தலங்களுண்டோ? | 177 |
| | |
மெய்த்தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர் பொய்த்தலத் தெய்வத்துண்டோ? குதம்பாய் பொய்த்தலத் தெய்வத்துண்டோ? | 178 |
| | |
சிற்பர்கள் கட்டுந் திருக்கோயில் உள்ளாகத் தற்பரம் வாழ்வதுண்டோ? குதம்பாய் தற்பரம் வாழ்வதுண்டோ? | 179 |
| | |
தன்னால் உண்டாம்சிட்டி தன்னாலே சிட்டித்த புன்கோயில் உள்ளவன்யார்? குதம்பாய் புன்கோயில் உள்ளவன்யார்? | 180 |
| | |
அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே இன்பான கோயிலடி குதம்பாய் இன்பான கோயிலடி. | 181 |