வயித்தியங் கூறல் முப்பிணி தன்னை அறியாத மூடர்கள் எப்பிணி தீர்ப்பாரடி குதம்பாய் எப்பிணி தீர்ப்பாரடி. | 164 |
| | |
எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற் விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய் விட்டோடும் நோய்கள் எல்லாம். | 165 |
| | |
நாடி ஒருபது நன்காய் அறிந்திடில் ஓடிவிடும் பிணியே குதம்பாய் ஓடுவிடும் பிணியே. | 166 |
| | |
சத்தவகை தாது தன்னை அறிந்தவன் சுத்த வயித்தியனே குதம்பாய் சுத்த வயித்தியனே. | 167 |
| | |
வாயு ஒருபத்தும் வாய்த்த நிலைகண்டோன் ஆயுள் அறிவானடி குதம்பாய் ஆயுள் அறிவானடி. | 168 |
| | |
ஆயுள் வேதப்படி அவிழ்த முடித்திடில் மாயும் வியாதியடி குதம்பாய் மாயும் வியாதிபடி. | 169 |
| | |
கற்பநிலை கூறல் பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர் கற்பாந்தம் வாழ்வாரடி குதம்பாய் கற்பாந்தம் வாழ்வாரடி. | 170 |
| | |
வேவாத முப்பூவை வேண்டி உண் டார்பாரில் சாவாமல் வாழ்வாரடி குதம்பாய் சாவாமல் வாழ்வாரடி. | 171 |
| | |
விந்து விடார்களே வெடிய சுடலையில் வெந்து விடார்களடி குதம்பாய் வெந்து விடார்களடி. | 172 |