மந்திரநிலை கூறல் நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்தெலாம் மேற்பற்றிக் கண்டறி நீ குதம்பாய் மேற்பற்றிக் கண்டறி நீ. | 155 |
| | |
சட்கோணத்து உள்ளந்தச் சண்முக அக்கரம் உட்கோணத்து உள்ளறி நீ குதம்பாய் உட்கோணத்து உள்ளறி நீ. | 156 |
| | |
ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே சிந்தையுள் கண்டறி நீ குதம்பாய் சிந்தையுள் கண்டறி நீ. | 157 |
| | |
வாதநிலை கூறல் ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில் வீறான முப்பாமடி குதம்பாய் வீறான முப்பாமடி. | 158 |
| | |
விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால் வந்தது வாதமடி குதம்பாய் வந்தது வாதமடி. | 159 |
| | |
அப்பினைக் கொண்டந்த உப்பினைக் கட்டினால் முப்பூ ஆகுமடி குதம்பாய் முப்பூ ஆகுமடி. | 160 |
| | |
உள்ளக் கருவியே உண்மை வாதம் அன்றிக் கொள்ளக் கிடையாதடி குதம்பாய் கொள்ளக் கிடையாதடி. | 161 |
| | |
பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல் மண்ணாலே இல்லையடி குதம்பாய் மண்ணாலே இல்லையடி. | 162 |
| | |
ஐந்து சரக்கொடு விந்துநா தம் சேரில் வெந்திடும் லோகமடி குதம்பாய் வெந்திடும் லோகமடி. | 163 |