சமயநிலை கூறல் தன்புத்தி தெய்வமாய்ச் சாற்றிய சார்வாகம் புன்புத்தி ஆகுமடி குதம்பாய் புன்புத்தி ஆகுமடி. | 146 |
| | |
கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறி வாகுமடி குதம்பாய் புல்லறி வாகுமடி. | 147 |
| | |
அண்டத்தைக் கண்டு அநாதியில் என்பவர் கொண்ட கருத்தவமே குதம்பாய் கொண்ட கருத்தவமே. | 148 |
| | |
பெண்ணின்ப முத்தியாய்ப் பேசும்பா டாண்மதம் கண்ணின்மை ஆகுமடி குதம்பாய் கண்ணின்மை ஆகுமடி. | 149 |
| | |
சூரியன் தெய்மாய்ச் சுட்டுஞ் சமயந்தான் காரியம் அல்லவடி குதம்பாய் காரியம் அல்லவடி. | 150 |
| | |
மனம்தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய இனமதி ஈனமடி குதம்பாய் இனமதி ஈனமடி. | 151 |
| | |
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள் கற்பனை ஆகுமடி குதம்பாய் கற்பனை ஆகுமடி. | 152 |
| | |
நீண்ட குரங்கை நெடிய பருந்தினை வேண்டப் பயன்வருமோ? குதம்பாய் வேண்டப் பயன்வருமோ? | 153 |
| | |
மெய்த்தேவன் ஒன்றென்று வேண்டாத பன்மதம் பொய்த்தேவைப் போற்றுமடி குதம்பாய் பொய்த்தேவைப் போற்றுமடி. | 154 |