வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை வீணில் பறவைகள் மீதிலெய் யாதே. | பாப |
| |
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந் தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. | பாப |
| |
பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன் பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன் வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே. | பாப |
| |
போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப் புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர் தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே. | பாப |
| |
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி காட்டி மயங்கியே கட்குடி யாதே அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே. | பாப |
| |
பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி சத்திய மென்றதை யீட்டி - நாளுந் தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. | பாப |
| |
செப்பரும் பலவித மோகம் - எல்லாம் சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம் ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய் ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். | பாப |
| |
எவ்வகை யாகநன் னீதி - அவை எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி ஒவ்வாவென்ற பல சாதி - யாவும் ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. | பாப |