பாரி லுயர்ந்தது பத்தி - அதைப் பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ் சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. | பாப |
| |
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர மானந்தத் தேவின் அடியினை மேவி இன்பொடும் உன்னுட லாவி - நாளும் ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. | பாப |
| |
ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற் கான வழியை யறிந்து நீ கொண்டு சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு. | பாப |
| |
ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத் தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம் வான்கதி மீதிலே நாட்டம் - நாளும் வையி லுனக்கு வருமே கொண் டாட்டம். | பாப |
| |
எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. | பாப |
| |
இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும் இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன் சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. | பாப |
| |
பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப் போதகர் சொற்புத்தி போதவோ ராதே மைவிழி யாரைச்சா ராதே - துன் மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. | பாப |
| |
வைதோரைக் கூடவை யாதே - இந்த வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே | |