பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்289


அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
     அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.
பாப
 
மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை
     மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே
பொய்க்கலை யால்நட வாதே - நல்ல
     புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே.
பாப
 
கூட வருவதொன் றில்லை - புழுக்
     கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
     தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.
பாப
 
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
     ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
     மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.
பாப
 
உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
     ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக்
     கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை.
பாப
 
காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
     கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசமுன் கன்மங்கள் சாமோ - பல
     பேதம் பிறப்பது போற்றினும் போமோ.
பாப
 
பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
     போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்
மெய்யாக வேசுத்த சாலம் - பாரில்
     மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.
பாப
 
சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
     சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும்
     ஆனந்த மாக நிரம்பிய புங்கம்.
பாப