நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம். | பாப |
| |
நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. | பாப |
| |
தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ் சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத் திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே. | பாப |
| | |
நல்ல வழிதனை நாடு - எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு. | பாப |
| | |
நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம் நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. | பாப |
| |
வேத விதிப்படி நில்லு - நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச் சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. | பாப |
| |
பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே இச்சைய துன்னை யாளாதே - சிவன் இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே. | பாப |
| |
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு | |