பக்கம் எண் :

288சித்தர் பாடல்கள்

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
     நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
     பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.
பாப
 
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
     நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
     கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.
பாப
 
தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
     சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
     திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.
பாப
  
நல்ல வழிதனை நாடு - எந்த
     நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
     வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.
பாப
  
நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்
     நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட
     பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.
பாப
 
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
     மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்
     சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.
பாப
 
பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்
     பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே
இச்சைய துன்னை யாளாதே - சிவன்
     இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.
பாப
 
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
     வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு