பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்287


“சாபங் கொடுத்திடலாமோ - விதி
தன்னை நம்மாலே தடுத்திட லாமோ
கோபங் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ”

     கடுவெளிச்  சித்தர்  பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தது.
மனித வாழ்க்கைக்கு  இன்பமும்  மகிழ்ச்சியையும்  தரும்  பாடல்களாதலால்
இவைகளை ஆனந்தக் களிப்பில் பாடினாற் போலும்.

“மெய்ஞானப் பாதையிலேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்தமாம் வழி கூறு”

என்று  நாம்  செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெளிவாகத் தம் பாடலில்
கூறியுள்ளார் கடுவெளிச் சித்தர்.

ஆனந்தக்களிப்பு

பல்லவி

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

 
 
சாபங்கொடுத்திட லாமோ - விதி
     தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ - இச்சை
     கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.
பாப
 
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்
     சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் - எந்த
     நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.
பாப