பக்கம் எண் :

320சித்தர் பாடல்கள்

அந்தவிடம் அத்தனையும் அருளாய் இருந்துதடி
சொந்தம் இடமெல்லாம் - என் ஆத்தாளே
     சுகமாய் மணக்குதடி.
162
  
இந்தமணம் எங்கும் இயற்கைமணம் என்றறிந்து
அந்தச் சுகாதீதம் - என் ஆத்தாளே
     அருட்கடலில் மூழ்கினன்டி.
163
  
அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான்
சத்திசிவம் என்றறிந்தே - என் ஆத்தாளே
     சச்சுபலங் கொண்டான்டி.
164
  
உள்ளத்தொளி யாகவடி ஓங்காரத்து உள்ளிருக்கும்
கள்ளப் புலன் அறுக்க - என் ஆத்தாளே
     காரணமாய் வந்தான்டி.
165
  
கணக்கனார் வாசலது கதவுதான் தாள்திறந்து
பிணக்காத பிள்ளையென்று - என் ஆத்தாளே
     பீடமிடம் பெற்றேன்டி.
166
  
மூன்று சுழிவழியே முன்னங்கால் தான்மடித்து
ஈன்று சுழிவழியே - என் ஆத்தாளே
     இசைந்திருந்த மந்திரமும்.
167
  
தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே
மூன்றுவழி போகவடி - என் ஆத்தாளே
     முதியமன ஆச்சுதடி.
168
  
சுத்த மத்தமற்றே தொண்டராய்த் தொண்டருடன்
அத்திவித்தின் போலே - என் ஆத்தாளே
     அதிகம் அளித்தேன்டி.
169
  
வித்துருவத் தோடே விநாயகனைத் தாள்தொழுது
அத்துருவம் நீக்கிபடி - என் ஆத்தாளே
     அறிய அளித்தேன்டி.
170
  
மின்னார் விளக்கொளிபோல் மேவுமிதே யாமாகில்
என்னாலே சொல்லவென்றால் - என் ஆத்தாளே
     எழும்புதில்லை என் நாவு.
171