அரூபமாய் நின்றானை அகண்டபரி பூரணத்தைச் சொரூபமாய் நின்றிடத்தே - என் ஆத்தாளே தோன்றிற்றுத் தோன்றுமடி. | 172 |
| | |
அட்சரங்கள் ஆனதுவும் அகங்காரம் ஆனதுவும் சட்சமையம் ஆனதுவும் - என் ஆத்தாளே தணலாக வெந்ததடி. | 173 |
| | |
சமையஞ் சமையமென்பார் தன்னைஅறியாதார் நிமைக்குள் உளுபாயமென்பார் - என் ஆத்தாளே நிலமை அறியாதார். | 174 |
| | |
கோத்திரம் கோத்திரமென்பார் குருவை அறியாதார் தோத்திரஞ் செய்வோமென்பார் - என் ஆத்தாளே சொரூபம் அறியாதார். | 175 |
| | |
உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி பெற்றார் இணக்கமடி - என் ஆத்தாளே பேரில் பிணக்கமடி. | 176 |
| | |
தேய்ந்த இடத்திருக்கச் சிந்தைஅறியுமனம் ஆய்ந்த இடமெல்லாம் - என் ஆத்தாளே அவசமனம் வீசுதடி. | 177 |
| | |
பேதிச்சு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி சாதிஇவன் அன்றெனவே - என் ஆத்தாளே சமையத்தார் ஏசுவரே. | 178 |
| | |
நல்லோ ருடன்கூடி நாடறிய வந்ததெல்லாம் சொல்லவாய் உள்ளவர்கள் - என் ஆத்தாளே சொல்லி நகைப்பாரோ. | 179 |
| | |
இன்பமுற்று வாழ்ந்ததடி என்மாயம் ஆச்சுதடி தம்பறத் தள்ளிவிடி - என் ஆத்தாளே தனம்போன மாயமடி. | 180 |
| | |
வல்லான் வகுத்தவழி வகையறிய மாட்டாமல் இல்லான் இருந்தவழி - என் ஆத்தாளே இடம் அறியாது ஆனேன்டி. | 181 |