பக்கம் எண் :

336சித்தர் பாடல்கள்

மலமுஞ் சலமுமற்று மாயையற்றுமானமற்று
நலமுங் குலமுமற்று நானிருப்ப தெக்காலம்.
100
  
ஓடாமலோடி உலகைவலம் வந்து சுற்றித்
தேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம்.

101
  
அஞ்ஞானம் விட்டே அருண்ஞானத் தெல்லைதொட்டு
மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம்.

102
  
வெல்லும் மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டகன்று
சொல்லுமட்டுஞ் சிந்தை செலுத்துவது மெக்காலம்.

103
  
மேலாம் பதந்தேடி மெய்ப்பொருளை யுள்ளிருத்தி
நாலாம் பதந்தேடி நான்பெறுவ தெக்காலம்.

104
  
எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல்
கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்காலம்.

105
  
என்னை அறிந்து கொண்டே எங்கோமா னோடிருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்ப தெக்காலம்.

106
  
ஆறாதா ரங்கடந்த ஆனந்தப் பேரொளியை
வேறாகக் கண்டுநான் பெற்றிருப்ப தெக்காலம்.

107
  
ஆணவ மாயத்தா லழிந்துடலம் போகாமுன்
காணுதலா லின்ப முற்றுக்கண்டறிவ தெக்காலம்.

108
  
மும்முலமுஞ் சேர்த்து முளைத்தெழுந்த காயமிதை
நிர்மலமாய்க் கண்டுவினை நீங்கியிருப்ப தெக்காலம்.

109
  
முன்னை வினைகெடவே மூன்றுவகை காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவதினி யெக்காலம்.

110
  
கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம்.

111
  
கனவுகண்டாற் போலெனக்குக் காட்டிமறைத் தேயிருக்க
நினைவைப் பரவெளிமேல் நிறுத்துவது மெக்காலம்.

112
  
ஆரென்று கேட்டதுவும் அறிவுவந்து கண்டதுவும்
பாரென்று சொன்னதுவும் பகுத்தறிவ தெக்காலம்.

113