நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை முனைக்கு மேற்கண்டுகண்ணில் முளைந்தெழுப்ப தெக்காலம். | 114 |
| | |
முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய் அப்பாழும் பாழா அன்புசெய்வ தெக்காலம். | 115 |
| | |
சீயென் றெழுந்து தெளிந்த நின்றவான் பொருளை நீயென்று கண்டு நிலைபெறுவ தெக்காலம். | 116 |
| | |
வவ்வெழுத்து மவ்வெழுத்தும் வாளாகுஞ் சிவ்வெழுத்தும் யவ்வெழுத்தினுள்ளே யடங்கிநிற்ப தெக்காலம். | 117 |
| | |
எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே அழுத்தமாய்ச் சிந்தைவைத் தன்புகொள்வ தெக்காலம். | 118 |
| | |
அருவாய் உருவாகி ஆதியந்த மாகிநின்ற குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம். | 119 |
| | |
நானென் றறிந்தவனை நானறியாக் காலமெல்லாந் தானென்று நீயிருந்த தனையறிவ தெக்காலம். | 120 |
| | |
என்மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணிஎண்ணிப் பார்த்தபின்பு தன்மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்ப தெக்காலம். | 121 |
| | |
ஒளியி லொளியாம் உருப்பிறந்த வாறது போல் வெளியில் வெளியான விதமறிவ தெக்காலம். | 122 |
| | |
ஒளியிட்ட மெய்ப்பொருளை யுள்வழியிலேயடைத்து வெளியிட்டுச்சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம். | 123 |
| | |
காந்தம் வலித்திரும்பை கரத்திழுத்துக் கொண்டதுபோல் பாய்ந்து பிடித்திழுத்துன் பதத்தில் வைப்ப தெக்காலம். | 124 |
| | |
பித்தாயங்கொண்டு பிரணவத்தை யூடறுத்துச் செத்தாரைப்போலே திரிவதினி யெக்காலம். | 125 |
| | |
ஒழிந்தகருத்தினை வைத் துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க் கழிந்தபிணம்போலிருந்து காண்பதினி யெக்காலம். | 126 |
| | |
ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை யில்லாமற் சஞ்சரிப்ப தெக்காலம். | 127 |