ஐயாமும் ஆறு அகன்று வெறுவெளியில் மையிருளில் நின்றமனம் மாள்வதினி யெக்காலம். | 226 |
| |
காட்டும் அருண்ஞானக் கடலிலன்புக் கப்பல்விட்டு மூட்டுங்கரு ணைக்கடலில் மூழ்குவது மெக்காலம். | 227 |
| |
நானாரோ நீயாரோ நன்றாம் பரமான தானோரோ வென்றுணர்ந்து தவமுடிப்ப தெக்காலம். | 228 |
| |
எவரவர்க ளெப்படிகண் டெந்தப்படி நினைத்தார் அவரவர்க் கப்படிநின் றானென்ப தெக்காலம். | 229 |
| |
உற்றுற்றுப் பார்க்க வொளிதருமா னந்தமதை நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பதினி யெக்காலம். | 230 |
| |
விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல் களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம். | 231 |
| |
என்னையே நானறியேன் இந்தவண்ணஞ் சொன்னதெல்லாம் முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவ தெக்காலம். | 232 |
| |
மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கிக் காயத்தை வேறாக்கிக் காண்பதுனை எக்காலம் | 233 |
| |
ஐஞ்சு கரத்தானை அடியிணையைப் போற்றிசெய்து நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம். | 234 |