பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்345


ஐயாமும் ஆறு அகன்று வெறுவெளியில்
மையிருளில் நின்றமனம் மாள்வதினி யெக்காலம்.
226
  
காட்டும் அருண்ஞானக் கடலிலன்புக் கப்பல்விட்டு
மூட்டுங்கரு ணைக்கடலில் மூழ்குவது மெக்காலம்.
227
  
நானாரோ நீயாரோ நன்றாம் பரமான
தானோரோ வென்றுணர்ந்து தவமுடிப்ப தெக்காலம்.
228
  
எவரவர்க ளெப்படிகண் டெந்தப்படி நினைத்தார்
அவரவர்க் கப்படிநின் றானென்ப தெக்காலம்.
229
  
உற்றுற்றுப் பார்க்க வொளிதருமா னந்தமதை
நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பதினி யெக்காலம்.
230
  
விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம்.
231
  
என்னையே நானறியேன் இந்தவண்ணஞ் சொன்னதெல்லாம்
முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவ தெக்காலம்.
232
  
மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கிக்
காயத்தை வேறாக்கிக் காண்பதுனை எக்காலம்
233
  
ஐஞ்சு கரத்தானை அடியிணையைப் போற்றிசெய்து
நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம்.
234