பக்கம் எண் :

370சித்தர் பாடல்கள்

திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்
     தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
     மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.
2
  

தனி ஞானம்

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
     உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
     விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
     பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
     கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே;

3
  
விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால்
     விதமான நாதமது குருவாய்ப் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
     ஆதியந்த மானகுரு நீயே யாவாய்
சந்தேக மில்லையடா புலத்தி யனே
     சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே;
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த
     மூலமதை யறியாட்டால் மூலம் பாரே.
4
  
மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு
     முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு;
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்
     சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்;
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி
     செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை
     நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே.
5