ஞானம் - 4 எண்சீர் விருத்தம் பூரணமே தெய்வமென உரைத்தா ரையா பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும் காரணத்தைச் சொல்லுகிறேன்; நினைவாய்க் கேளு கலையான பதினாறும் பூரணமே யாகும். மாரணமா முலகத்தில் மதிம யங்கி மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா! வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால் வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே. |