பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்375


பகைமை பண்ணிக் கொள்ளாதே; வீண்பே சாதே
     பரப்பிலே திரியாதே; மலையே றாதே;
நகையாதே சினங்காதே யுறங்கி டாதே
     நழுவாதே சுழுமுனையிற் பின்வாங்காதே;
செகமுழுதும் பரிபூரண மறிந்து வென்று
     தெளிந்துபின் யுலகத்தோ டொத்து வாழே!
10
  
வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
     வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
     தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
     பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
     கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே.
11
  
உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே
     உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்;
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால்
     உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்
     உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்;
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே
     உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே.
12
  
பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும்
     பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்
விதியின்ன விடமென்று சொல்லக் கேளு
     விண்ணான விண்ணுக்கு ளண்ணாக் கப்பா!
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
     மகத்தான செவியோடு பரிச மெட்டும்
பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம்;
     பகருவார் சொர்க்கமும் கயிலாச மென்றே.
13
  
கயிலாசம் வைகுந்தந் தெய்வ லோகம்
     காசின்யா குமரி யென்றுஞ் சேது வென்றும்