பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்409


மாட்டையிலே யறிவோடு மனத்தை மாட்டும்
     மறுகாலும் நாதத்தைக் கூர்ந்து கேளே
ஓட்டையிலே யொருவழியா யோடிற் றானால்
     உத்தமனே யச்சின்ன முத்தி யையா!
42
  
              ஏறுகிற துறை

ஐயனே! குருவான அகண்ட மூர்த்தி!
     அதிதமென்ற ஞானமெல்லாம் அருளிச் செய்தாய்;
மெய்யனே! ஏறுகிற சாதகஞ் சொல்
     வேதாந்த லட்சியத்தை விளங்கச் சொல்லு
துய்யனே! நிலைதோறு மெழுத்தைச் சொல்லு
     சொற்பெரிய பிராணாய சூட்சஞ் சொல்லு
தையனே! தையமென்ற நிர்த்தஞ் சொல்லு
     சாதகமாய் லட்சயத்தைச் சாற்றி டாயே.
43
  
சாற்றிடென்று கேட்டமா ணாக்க னேகேள்;
     சந்தோட மாச்சுதிப்போ சார்பு சொல்வேன்;
ஏற்றமென்ற மூலத்தில் வாசி வைத்தே
     எளிதாகப் பிராணாயம் பண்ணித் தேறி
ஆற்றுமென்ற குண்டலிக்குள் நடனங் கண்டால்
     ஆதித்தன் கோடியைப்போல் காந்தி காணும்
மாற்றுமென்ற கண்டத்தி லங்கென் றூணு
     வாய்திறக்க வொட்டாது வழிசெய் வாயே.
44
  
வழியோடே நின்றுரைத்துப் பழக்க மாகி
     மனோன் மணியாம் புருவமையத் தூடேசென்றே
ஒளியோடே மவுனத்தை யோட்டி யூதாய்;
     உத்தமனே! சாம்பவியைக் கண்டு கொள்வாய்
நெளிவோபோ யிவ்வளவும் யோக மார்க்கம்
     நின்றவனே சிவயோகி நினைவாய்க் கேளு;
தெளிவோடே விந்துவென்ற குரு பதத்தில்
     தேக்கப்பா மவுனத்தைத் தாரை யாமே.
45
  
ஆமப்பா விந்துரவி மதியோர் கூடி
     ஆச்சரியங் கண்கூசி மயக்க மாகி