பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்411


ஆருள்ளா ருலகத்தில் வரைகுரு சொல்ல
     ஆச்சரியஞ் சித்தருக்குக் கீர்த்தி வைத்தார்
நேருள்ள ரிடிகளொடு முனிவ ரையா
     நேராகச் சமாதியிலே கண்டோ ருண்டு
தாருள்ள சலத்தோடுஞ் சென்றா ரில்லை
     சமர்த்தான மனத்தினிடச் சத்தி தானே.
50
  
சத்தியுள்ள வாசனையாங் குரங்கு கேளு
     தாண்டியல்லோ இந்திரியக் கொம்புக் குள்ளே
பத்தியுள்ளே யலைத்தடித்துப் பேய்க்கூத் தாக்கிப்
     பாங்கான மனத்தையல்லோ சின்னம் பண்ணி
முத்தியுள்ள வாசலுக்கே யேறொட் டாது
     முழுமோசச் சனியனப்பா ஞானத் துக்குக்
கொத்தியுள்ள வாசனையை யடக்கிப் பார்த்தால்
     குருடனுக்கும் ஞானவழி கூடுங்காணே.
51
  
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி!
     குரங்கைவிட்டே அகலுகிற வழியைச் சொல்க;
நாடுவது முலகத்து வாதம் வந்தால்
     நன்மனமுண் டானால்சாத் திரத்திற் சொல்வார்
ஊடுவது சாதுசங்கம் வேதாந் தம்பார்
     உத்தமனே வாசனையாங் குரங்கு போகும்;
ஆடுவது தொய்தவா சனையி லேற்றும்
     அப்படியே யுலகத்தி லனேகம் பேரே.
52
  
பேரான வுலகத்தில் ஞான முற்றும்
     பேசாம லருகிருந்த விடத்தில் மைந்தா!
வாரான மோதத்தி லிங்க மாகும்
     வாதிக்கு மேருவுக்கும் நடுவே கோடி
காரான காமத்தால் பாண்டி லிங்கம்
     கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கந்
தாரான மலைதோறும் பூமி தோறுஞ்
     சாற்றரிது சாற்றரிது சார்ந்து பாரே.
53
  
பாரப்பா சுயம்பில்வந்து பிட்சை யேற்றால்
     பலித்ததப்பா ஞானசித்தி மவுன சித்தி;