பக்கம் எண் :

412சித்தர் பாடல்கள்

நேரப்பா வொன்பது பேரிவரு ளாறு
     நிகராகப் பெலிகொண்டோர் நீடு மூவர்
காரப்பா விண்ணையென்றால் சாவார் கர்த்தார்
     காத்தாலே ஞானசித்தி கலந்து கூடும்;
ஊரப்பா வாதியைப்போல் நீங்கள் கெட்ட
     உலுத்தரென்பார் சித்தர்கள்தா முரைத்தி டீரே.
54
  
உரைக்கவல்லோ ராசயோகம் வைத்தா னீசன்?
     உண்டுடுத்துத் திரிவதற்கோ சொன்னா னையன்?
மறைக்கவா சனைலகிரி கொள்ளு மென்றான்
     மகத்தான தெட்சணா மூர்த்தி யாசான்
நிறைக்கவல்லோ யோகமுதல் ஞானஞ் சொன்னான்
     நிற்கவிட மற்றநிர் மலமாஞ் சோதி
இறைக்கவல்லோ வூறினதோர் கேணி யைப்போல்
     எடுக்கெடுக்க வெழும்பும்வா சனைதான் காணே.
55
  
எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி;
     ஏகாமல் வாசனையை யடித்தோன் சித்தன்
எழும்பாமல் கருவிகளை யிருக்கச் சாடி
     இருத்தினவன் சிவயோகி வாத யோகி;
எழும்பாம லடிப்பதற்குச் சூட்சஞ் சொல்வேன்;
     என் மக்காள்! மவுனத்தே யிருந்தாற் போகும்;
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால்
     ஏதுமில்லை சுத்தவெளி யிருளும் போச்சே.
56
  
போச்சென்றே இருக்கிறதோர் ஞானத் துக்குப்
     புகழான வல்லமைதா னென்ன மைந்தா!
வாச்சென்ற அகண்டத்துள் வரைக ளாறு
     மருவினால் சடத்தோடே யவனே சித்தன்;
நீச்சென்ற வரைப்பார்த்து வாரேன் மக்காள்
     நில்லுங்கோள் குகையினுள்ளே யென்று சொல்லித்
தோச்சென்ற பூரணத்திற் சொக்கி நின்ற
     சுந்தரா னந்தன்வந்து தொழுதிட்டானே.
57
  
தொழுதுகொண்டு பதம் பிடித்த அகண்டத் துள்ளே
     சொக்குகிறோ மென்றுசொன்ன சுந்தரமே பையா!