பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்413


விழுதுகொண்ட ஆலைப்போல் நெட்டிட் டேறி
     வெளிகடந்தே ஆறுகலங் கண்டு வாரேன்;
முழுதுகண்டா னென்பிள்ளை யென்று கீர்த்தி
     மூட்டிவைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா
பழுதுகொண்டு வருகிறேன் திரும்பா விட்டால்
     பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே.
58
  
பாரப்பா அகண்டவெளி சுத்தக் கானல்
     பார்ப்பதற்கோ அங்கொன்று மிடமே யில்லை;
நேரப்பா ரவிகோடி வன்னி கோடி
     நேரான மதிகோடி கண்ணோ கூசும்
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி
     அதற்குள்ளே செல்லரிது மைந்தா போபோ;
காரப்பா குகையொன்று பட்டங்கட்டிக்
     கடுங்குளிகைச் சோடிட்டுக் கலந்திட்டேனே.
59
  
கலந்திட்டே னொருவரையில் நாத வோசை
     கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கமாச்சு;
சலந்திட்டேன் மறுவரையி லிடியோ கோடி
     கண்கெட்டேன் மதிக்கெட்டேன் காதுங் கெட்டேன்;
(,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,)
கலந்திட்டேன் மூவரையிற் காந்திக் குள்ளே
     கடுகவந்தேன் கொங்கணரை யழைத்திட் டீரே.
60
  
அழையுமென்ற சொற்கேட்டுச் சுந்த ரானந்
     தன்கணத்திற் கொங்கணரை யதிசீக் கிரத்தில்
விழைவுடனே யோடிவந்து தெண்ட னிட்டு
     விரைவுடனே கொங்கணர்தா னிக்க ணத்தில்
அழையுமென்றா ரெங்களைய ருங்க ளைத்தான்
     ஆச்சரியஞ் சொல்லுதற்கே யடியேன் வந்தேன்
அழையுமென்ற சீடனுக்குப் பின்னே வந்தே
     அடியேன்தான் வந்ததென்று பணிந்திட் டாரே.
61
  
பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து
     பராபரமே நிர்க்குணமே பண்புள் ளோனே!