பக்கம் எண் :

414சித்தர் பாடல்கள்

அணிந்திட்ட அறுவரையிற் சொக்கிச் சென்ற
     ஆதியென்ற பராபரமே யையா வையா!
மணியிட்ட சிலம்பொலியைக் கேட்ட மூர்த்தி
     மார்க்கத்தை யெப்படித்தா னேறி னீரோ
கணியிட்ட நிர்மலா மனத்தி னாலே
     கைலாய தேகமென்ன தங்க மாச்சு.
62
  
ஆச்சப்பா அப்படியே வரணு மென்றே
     ஆசைகொண்டே யிருக்கவழைத் தனுப்பு வித்தீர்;
வாச்சப்பா மனுவொன்ற வடியே னுக்கு
     மைந்தன்மேல் கடாட்சத்தால் சொல்லவேணும்
ஓச்சப்பா கொங்கணரே யுபசார மென்ன
     ஓங்கினதை யுரைக்கின்றேன் கேளு கேளு;
காச்சப்பா வுலகத்தி லெடுத்த தேகம்
     கைலாயச் சட்டையாங் கருவைச் சொல்லே;
63
  
கருவென்ன வொன்றுமில்லை மேரு நேரே
     காணப்பா வீசானங் கைலா யமாச்சே;
உருவென்ன வெடுத்துகை லாய தேகம்
     உத்தமனே நிராகார ஞான சித்தி
குருவென்ன நிர்க்குணத்தின் மவுனத் துள்ளே
     குவிந்துரைத்த பெருமையின் கைலாய மாச்சே;
அருவென்ன மகாரவித்தை முட்டிக்கொண்டு
     ஆதிவிர்த்த கற்பமது வுண்டு பாரே.
64
  
பாரப்பா சூதமுண்டு மவுனந் தாக்கப்
     பளிச்சென்ற ஏழுசட்டை பண்ணாய்ப் போதும்
நேரப்பா அச்சடங்கை லாய தேகம்
     நிமிடத்தே சித்தியாமுன் னினைவுக் கையா
ஆரப்பா வுனைப்போல நினைத்த பண்ணல்
     அரிதரிது கூடாகி மூடர் பேரால்
சேரப்பா சொல்லிவிட் டேனென்ற பேச்சுச்
     செப்புமுன்னே கைலாய முற்றுப் பாரே.
65
  
உற்றுநின்ற பலநூலைப் பார்த்துப் பார்த்தே
     உரையாவே தாந்தசித் தாந்த மென்று