பக்கம் எண் :

424சித்தர் பாடல்கள்

ஆகவப்பா இதற்குள்ளே ஞானம்நூறு
     அப்புறத்தே சொன்னதொரு ஞானம்நூறு
ஆகவப்பா இருபத்தோ டெழுநூ றுந்தான்
     அறிந்தமட்டும் சொல்லிவந்தேன் வல்லோருண்டோ
ஆகவப்பா பார்த்தேயிக பரமுஞ் சித்தி
     ஆதியென்ற குருவருளால் சொன்ன முற்றே.
102
  
            பின் ஞானம் நூறு

கைலாயப் பரம்பரத்தி லென்னை யாண்ட
     கடவுளெனுந் தெட்சணா மூர்த்தி பாதங்
கைலாயத் தெனையீன்ற ஆயி பாதங்
     கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன்;
கைலாய நிர்க்குணநிர் மலமே தேவர்
     காட்டுகின்றீர் கேசரியின் மயமாய்க் கையில்
கைலாய பரம்பரையாய் வந்த பேர்க்குக்
     கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே;
1
  
பாடுகின்றேன் சரியையென்ன? தேவி தீட்சை
     பரிவாகக் கிரியையென்ன? தேவி பூசை;
பாடுகிறேன் யோகமென்மா சற்ற அமுதம்;
     பாங்கான ஞானமென்ன? மௌனத் தந்தம்
பாடுகிறேன் திடத்திரனா யீதோ கீதம்;
     பாங்கான அஞ்சலிதான் மனமாந் தேகம்
பாடுகிறேன் பரன்முனிவ ளுக்கே யென்றால்
     பரிவானால் ஞானவித்தை பலிக்குந் தானே.
2
  
தானென்ற ஞானத்தின் பூமி கேளு;
     சாதகமா யோகமென்ற அபர வீடு
வானென்ற பூமியிலே வித்தை கேளு;
     அறிவிற்கு மறிவான வுகார விந்து
வேனென்ற வெளியெல்லாம் படைத்து நின்று
     வேதாந்த அண்டமென்ற மகார மாச்சு;
கோனென்ற நாதமங்கே குமுறி யாடும்;
     கூப்பிட்டாற் கேளாது கண்ணும் போச்சு.
3