பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்527


ஓங்கார வட்டம் உடலாச்சு                       பின்னும்
ஊமை எழுத்தே உயிராச்சு
ரீங்காரம் ஸ்ரீங்கார மான வகையதை
நீதா னறிவாய் ஆனந்தப் பெண்ணே
3
  
அகாரம் உகாரத் துடன்பொருந்த                     அது
யகார மானது அறிந்துகொண்டு
சிகார மான தெளிவினி லேநின்று
தேர்ந்து கொள்வாய் ஆனந்தப் பெண்ணே
4
  
பஞ்ச பூ தங்களைக் கண்டறிந்தோர்                   இகப்
பற்றினைச் சற்றும் நினைப்பாரோ
சஞ்சலம் இல்லாது யோக வழியதைத்
தானறிந்துய்வாயா ஆனந்தப் பெண்ணே
5
  
தவ நிலையை அறிந்தோர்க்கு                      ஞானந்
தன்னால் தெரியும் எனவேதான்
நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை
நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே.
6
  
வாசி நிலையை அறிந்துகொண்டால்                   தவம்
வாச்சுது என்றே மனது கந்து
தேசி எனும்பரி மீதேறி நாட்டம்
செய்தது அறிவாய் ஆனந்தப் பெண்ணே.
7
  
நந்தி கொலுவைத் தெரிந்தோர்கள்                    வாசி
நாட்டம் விடார்கள் ஒருக்காலும்
உந்திக் கமலத்தில் அந்தணன் பீடத்தை
உற்றறிந் துய்வாய் ஆனந்தப் பெண்ணே.
8
  
மாலுந் திருவும் வசித்திருக்கும்                       இடம்
வணங்கி இப்பால் செல்லும்போது
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை
மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே.
9
  
எந்தெந்தப் பூசை புரிந்தாலும்                      பரம்
ஏகம் என்றே கண்டு அறிந்தாலும்