மவுனத்தை உச்சரித்து மந்திரபீ டத்தேறிக் கெவுன மறிந்து கிலேசம்அதை விட்டேண்டி. | 22 |
| |
கற்பஞ்சாப் பிட்டே கனத்தவஞ் செய்ததினால் விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள் | 23 |
| |
காயசித்தி யோகசித்தி கண்டதனில் ஒண்டினதால் மாயசித்தி யாலே மயங்காது இருக்கிறண்டி. | 24 |
| |
ஓமென்ற அக்கரத்தின் உட்பொருளைக் கண்டுவந்தும் தாமென்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி. | 25 |
| |
பிரணவமும் தானறிந்து பேச்சடங்கி நின்ற சொருபந் தெரிந்தத் துலக்கத்தில் நிற்குறண்டி. | 26 |
| |
நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி. | 27 |
| |
அட்டகரு மம்தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும் இட்ட மதிற்சற்றும் இல்லாது இருக்குறண்டி. | 28 |
| |
நானென்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும் தான் எனலும் அற்றுத் தனியே திரிகுறண்டி. | 29 |
| |
எட்டாச் சுழிமுனையி லேயிருந்து என்மனதுக்கு எட்டாப் பொருளதனை எட்டிப் பிடித்தேண்டி. | 30 |
| |
சாகாக்கால் இன்னதெனத் தானறிந்து கொண்டதன் பின் வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி. | 31 |
| |
மோகாந்த காமெனும் மோகம் தவிர்ந்தன்பின் வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி. | 32 |
| |
சரியைகிரி யையோகந் தாண்டியபின் ஞான புரிக்கோட்டைக் குள்ளே புகுந்து திரிகுறண்டி. | 33 |
| |
மந்திரமுந் தந்திரமும் மாய விசர்க்கமெலாம் உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி. | 34 |
| |
சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத் தானறிய உத்தமியே நின்னுரு என்று ஓர்ந்தறிந்து கொண்டேண்டி. | 35 |