வேதமுஞ் சாத்திரமும் வேண்டும் பலசமயம் பேதமும் காணாப் பெருஞ்சமயம் நாதத்தில் | 4 |
| |
ஓசை அடங்க ஒளியம் பரமனையில் ஆசை அடங்க அனுபவிப்போன் பூசைபுரி | 5 |
| |
தொண்டர் இதயச் சுனைமடலில் வேரூன்றி விண்ட நறைக்கமல மெல்லடியான் எண்டிக்கும் | 6 |
| |
சாதியான் தோன்றும் சமரச மாயிருந்து பேதியான் வஞ்சம் இலாப் பேதமையான் ஆதி | 7 |
| |
முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து சிதலாய் வெளியொளியாஞ் சென்மம் சதகோடி | 8 |
| |
சத்தியும் மந்திரமும் தானாகப் பாவித்து முத்தி கொடுக்கும் முழுமுதல்வன் சுத்திய | 9 |
| |
செஞ்சடையான் யோகநிலை தேர்ந்து தனைக்குறியார் நெஞ்சடையான் பிஞ்சு நிலாச்சுடையான் நஞ்சார்ந்த | 10 |
| |
கண்டத்தான் தேடரிய காட்சியான் பல்கோடி அண்டத்தான் சோதி அருவுருவான் முண்டகச்செம் | 11 |
| |
போதம் கடலும் பொருப்பும் விருப்பாகிச் சூதுபுரி மூன்று தொழிலுடையோன் ஓதும் | 12 |
| |
சரியை கிரியை தவயோக ஞானம் தெரிய அமைத்த சிவசித்தன் துரியத்தில் | 13 |
| |
தோத்தி அணுவாய்த் துகழாய்ச் சுடரொளியாய்த் தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன் சாத்தரிய | 14 |
| |
முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமு முண்டாகி எக்குணமுந் தானாய் இருந்தருள்வோன் அக்கரமாம் | 15 |
| |
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ அட்சரமாய்ப் பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய்க் கொஞ்சப் | 16 |
| |
பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய் அருளாய்ந் தனியிருந்த ஆனந்தன் இருளாத | 17 |