பக்கம் எண் :

538சித்தர் பாடல்கள்

காட்சியான் கண்டவர்க்குக் காணாத பேர்க்குருவும்
சூட்சியாய் நின்ற தொழிலாளி                      ஆட்சி

18
  
இடைபிங் கலைசுழியினை எட்டாமல் மூலக்
கடையில் நடக்கும் கடலுடையோன்             விடையேறும்

19
  
பாசன் குடிலைப் பராசத்தி வீட்டிலுறை
ஏகன் பிறப்புறப்பு ஒன்று இல்லாதான்              யோகன்

20
  
சிறியன் பெரியன் சிவப்பன் கறுப்பன்
குறியன் நெடியன் எனக் கூறாதான்              பொறிகலந்த

21
  
பாசத்தான் பாசக் கட்டை அறுத்தவர்க்கு
மாசத்தான் சோதிமணி மண்டத்தான்              நேசத்தான்

22
  
பொய்யர்க்குப் பொய்யன் பொருந்தி யுளந்தோறும்
மெய்யர்க்கு மெய்யாய் வெளிநின்றோன்               ஐயன்

23
  
உருவும் அருவும் ஒளியும் வெளியும்
கருவும் கடந்த கன மாயன்                     குருவாகித்

24
  
தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு
மாத்தித் தனது வசம் ஆக்கியே                  சாத்தரிய

25
  
மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி
யானிடப முந்தும் அருள் ஆனந்தன்             தேனடர்ந்த

26
  
செங்கமலத் தோற்கரிய தேவன் அடியவர்கள்
அங்கலமத் தேயுறையும் ஆனந்தன்              எங்கள் குரு

27
  
நேசிக்கும் அன்பர்துயர் நீக்கி நிலைபெறவே
யாசிக்கு மெங்கள்குரு ஆனந்தன்                 பூசிக்கும்

28
  
பொன்மலைக்கும் வெள்ளிப் பொருப்புக்கும் பொற்புடைய
கன்மலைக்குந் தானே கடவுளாய்              பன்மலைக்கும்

29
  
எட்டாய்ச் சிகரம் எழுத்துக் கொழுந்தோட
மட்டான ஓங்கார வன்மலையான்                கட்டாகத்

30
  
தேடும் அடியார்கள் சின்னம் துகளறவே
ஆடுஞ் சிவகருணை ஆற்றினான்                 நாடுதவம்

31