மின்னே எரிந்தெழுந்த மேகம்போல் மெய்குளிர்ந்து தன்னை அறிந்த தளதளத்தாள். பொன்னனையாள் | 75 |
| | |
பக்குவத்தை நோக்கிமுகம் பார்த்துப் பரிமளிக்க முக்குணமும் கற்ற முதுகிழவி தொக்கறுத்து | 76 |
| | |
மின்னே அமுதம் விளைந்த மனக்கமலப் பொன்னே உறுதியுள்ள புத்திகேள் பன்னரிய | 77 |
| | |
வேத புராணர் வெறும்பிலுக்காய் உன்கமலப் பாதம் பணிவர்முகம் பாராதே நாதத் | 78 |
| | |
துரியமணி வாசலிலே தோன்றிமுகம் சத்தே தெரியநின்று பின்னை உள்ளே சென்று அரிதாகச் | 79 |
| | |
சாற்றுஞ் சரியைச் சளுக்கர் உனைத்தழுவப் போற்றுவார் அங்கவர்பின் போகாதே ஏற்றும் | 80 |
| | |
அவலக் கிரியை அசடர் உருனை மேவக் கவலைப் படுவார் கடத்திச் சிவயோக | 81 |
| | |
ஆதியர்கள் வந்துன் மலரடியைத் தெண்டனிட்டால் பேதியாது உள்ளழைத்துப் பேசிக்கொள் ஆதி | 82 |
| | |
தவஞான மோனத் தனக்காரர் வந்தால் அவமானம் பண்ணாது அழைத்துச் சிவபொருளைத் | 83 |
| | |
தேடாத மூடரிடம் சிக்காதே சிந்தையிலே நாடாத வஞ்சரிடம் நத்தாதே கோடாத | 84 |
| | |
சாத்திரத் தூரித்தர்தமைச் சாராதே தக்கமிடும் கோத்திரப் பஞ்சியளைக் கூடாதே சூத்திரப் | 85 |
| | |
பொய்வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய் மெய்வீணர் ஆசை விரும்பாதே கையோகக் | 86 |
| | |
காமத்துக்கு ஆன கலாதிவேள் நூல்கற்ற வாமத்தார் பால்மனது வையாதே நாமமிட்டுப் | 87 |
| | |
பஞ்சரிக்கும் பாசிப் பதப்பிலுக்கர் வந்தக்கால் நெஞ்செரியத் தள்ளிவிடு நில்லாமல் | 88 |