பக்கம் எண் :

546சித்தர் பாடல்கள்

சஞ்சலந் தனைப்பிரிந்து                       சித்தாதிகள்
     தாள்பணிந் தேன் நான் துணிந்தே.
4
  
சரியையுங் கிரியையும் விட்டு                     அப்பாற்
     சாதனாமா யோகமதின் பாதம் அதைத்தொட
உரியா தீதம்வெளிப்பட்                            டங்கு
     சும்மாயிருந் ததைச்சொல்ல எம்மாலாகுமோ.
5
  
பராபர வெளிகைக்கொண்டு                   மனம்ஒன்றிப்
     பற்றிடவே சிற்பரத்தின் உற்பனங் கண்டு
நிராதர மான                                    பண்டு
     நீங்கா ஆனந்தரசம் பாங்கதாய் உண்டு.
6
  
அடிநடு முடிவு கண்டேன்                      மோனநிலை
     அறிந்து கொண்டேன் ஞானந் தெரிந்துகொண்டேன்
முடிவில்லாப் பரப்பிரம                       சொரூபத்தை
     முற்றும் கண்டேன் இகப்பற்றும் விண்டேன்.
7
  
சுத்தப் பரவெளியே                            ஒளியாகத்
     தோன்றிட மெய்ஞ்ஞானச் சுகமடைந்தேன்
சத்துச்சித் தானந்தத்தைத்                      தெரிசிக்கச்
     சகலமும் பிரமமயம் புகலரிதே.
8
  
நாசிமுனை நடுவில்                            விளங்கிய
     நயனத்திடை ஒளியாம் பரவெளியில்
தேசிகன்திருக்                                  கூத்தை
     தெரிசித்தே மோனநிலை பரிசமுத்தே.
9
  
நினைவே கனவெனவும்                        தெளிந்தந்த
     நினைவையும் மறந்தெழு கலைமறந்தே
தனதெனும் தனைமறந்தே                            சுத்த
     சாகரத்தில் உழலாத பாகந் துறந்தே.
10
  
ஓமென்ற பிரணவத்தை                        இன்னதென
     உண்மைகண்ட பின்புவெகு நன்மையும் பெற்றேன்
நாமெனும் அகங்காரந்                         தனைவிட்டு
     நாட்டந் தெரிந்து கொண்டேன் தேட்டமுடனே
11