விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல் தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா தோன்றுமெய்ஞ் ஞானமடி. | 4 |
| |
தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல் சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா சாகரத்திலே உழல்வார். | 5 |
| |
இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம். | 6 |
| |
முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் நித்திரையும்விட்டு - ஞானம்மா நினைவோடு இருக்கணுமே. | 7 |
| |
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில் சினமாய்வரும் எமனும் - ஞானம்மா தெண்டநிட்டுப் போவானே. | 8 |
| |
யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல் மோகம் எனும் குழியில் - ஞானம்மா மூழ்கியேபோவார்கள். | 9 |
| |
சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி ஆத்திதேட நினைத்து - ஞானம்மா அலைவார் வெகுகோடி. | 10 |
| |
பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும் ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா ஏதொன்றும் இல்லையடி. | 11 |
| |
கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா கலங்கி அழுதாரடி. | 12 |
| |
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும் நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா நலிந்தே அழுவாரடி. | 13 |