பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்559


கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
     தேவமாதா இரவல் - ஞானம்மா
     தெரியாதே அலைவாரே.
14
  
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
     உத்தமர்போலப் பேசி - ஞானம்மா
     உலகில் திரிவாரடி.
15
  
காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
     காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
     கண்டறிதல் ஆகாதே.
16
  
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
     இல்லாவெளிச்சமது - ஞானம்மா
     ஈனவெளிச்சமடி.
17
  
சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
     இம்சையடைவோர்கள் - ஞானம்மா
     இருந்து பயன் ஆவதென்ன.
18
  
காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
     ஊத்தச் சடலமிது - ஞானம்மா
     உப்பிலாப் பொய்க்கூடு.
19
  
அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
     சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா
     தானமைத்த பொய்க்கூடே.
20