பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்571


30. ஆதிநாதர் என்ற
வேதாந்தச் சித்தர் பாடல்

     இவருடைய இயற்பெயர் ‘ஆதி நாதர்’ என்பது. வேதங்களின் முடிவை
உபநிடதங்கள் என்பர். அந்த உபநிடதங்கள் பல. ஒரு சிலவே வாழ்வின்
உண்மையை உணர்த்துவன. இவர் வடமொழியை அறிந்தவர். ஆதலின்
உபநிடதக் கருத்துகளை தம் 32 பாடல்களில் முத்தாக அமைத்துள்ளார்.
அவை கிளிக்கண்ணி மெட்டுடையனவாகும்.

கண்ணிகள்

ஆதிமத் யாந்தமதைக்
     அன்பாய் அறிவதற்குச்
சோதிச் சுடரொளியைச்
     தோத்திரம் செய்துகொள்ளே.
கிளியே

கிளியே
1
  
வாசாம கோசரத்தின்
     மார்க்கம் அறிந்துகொண்டு
நேசாவனுபவத்தில்
     நின்று தெளிவாயே.
கிளியே

கிளியே
2
  
அசல மூலமதிற்
     அந்தம் அறிவாயோ
விசன மற்றவிடம்
     மேவித் தெளிந்துகொள்ளே.
கிளியே

கிளியே
3
  
சுத்தபிர மத்தில் ஏகில்கிளியே
     தோன்றிய சத்திதன்னில்
கிளியே