கண்டறிந்து கொள்ளடா கணக்கறிந்து விள்ளடா கொண்டறிந்து தள்ளடா குருவறிந்து கொள்ளடா. | 47 |
| |
சூதங்கட்ட லாகுமே சொர்ணஉப்பு மாகுமே வாதம் வாத மென்றறிந்த வாதியேநீ பாரடா. | 48 |
| |
விட்டகுறை யானவன் மேதினியில் வந்தவன் தொட்டகுறைக் காரனுக்குத் தோற்றமே மெய்ஞ் ஞானமே. | 49 |
| |
வேறு ஏகாந்தம் பழம்பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு. | 50 |
| |
காய்த்தவாழை பூப்பூக்கும் காயாதவாழை தானுமில்லை பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறு தானுமில்லை. | 51 |
| |
இறைத்தகிணறு தானூறும் இறையாக்கிணறு தானுமில்லை விதைவிதைத்தால் முளைதேறும் விதையாநிலத்தி லொன்றுமில்லை | 52 |
| |
அழுதபிள்ளை பால்குடிக்கும் அழுகாதபிள்ளைக் கேதுமில்லை உழுதநிலந்தான் பயிரேறும் உழுகாதநிலத்தி லொன்றுமில்லை | 53 |
| |
ஆசையுளானுக்கு ரோசமில்லை ஆசையிலானுக் கொன்றுமில்லை | |