மழலையர் கையிலுட் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும், இவைதாம் வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்? மடமைகண் டிரங்குமென் நெஞ்சே. | 4 |
| |
நீட்டிய பல்லும் சினமடி வாயும் நிலைத்தவோர் கல்லுரு முன்னே கூட்டமாய் மோதிக் குடிவெறித் தவர்போல் குதிப்பர் தீ வளர்த்ததில் மிதிப்பார் ஆட்டினைத் துடிக்க வெட்டிவீழ்த் திடுவார் ஆங்கதன் உதிரமும் குடிப்பார் காட்டில் வாழ் காலக் கூத்துகொல் சமயம்? கண்ணிலார்க் கிரங்குமென் நெஞ்சே! | 5 |
| |
உடுக்கையை அடித்தே ஒருவன்முன் செல்வான் ஒருவன்தீச் சட்டியும் கொள்வான் எடுத்ததோர் தட்டில் பாம்புருத் தாங்கி இல்தொறும் சென்றுமுன் நிற்பார் நடுக்கொடும் தொழுவார் நங்கையர், சிறுவர், நல்குவர் காணிக்கை பலவும் கொடுத்தநீ றணிவார் இதுகொலோ சமயம்? குருடருக் கிரங்குமென் நெஞ்சே! | 6 |
| |
வேப்பிலைக் கொத்தும், விரிதலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும் கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கென ஆடுவள் குதிப்பாள் நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள் நற்குறி கேட்டிட நிற்பார் காப்பதோ வாழ்வை? இதுகொலோ சமயம்? கண்ணில்லார்க் கிரங்குமென் நெஞ்சே! | 7 |
| |
தாய்மொழி பேணார்; நாட்டினை நினையார் தம்கிளை, நண்பருக் கிரங்கார் தூய்நல் அன்பால் உயிர்க்கெலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க் கருளார் | |