பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள் ! முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே. | 546 |
| |
கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில் வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில் தொல்லைஅற் றிடப்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர் இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே. | 547 |
| |
இச்சகம் சனித்ததுவும் ஈசன்ஐந்து எழுத்திலே மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்து எழுத்திலே உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல் அஞ்செழுத்திலே நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்தெழுத்திலே. | 548 |
| |
சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால் நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்கள் ! பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல் சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே. | 549 |
| |
மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள் சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத் தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் இனமதில் பலர்கள் வையும்; இன்பம் அற்ற பாவிகள். | 550 |
| |
சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம் சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம் சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம் சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே. | 551 |