பக்கம் எண் :

112தமிழ்ஒளி கவிதைகள்2

போராடப் புறப்பட்டோம்!
       புயலென்ற திறப்பட்டோம்!
       பொங்கும் ஆழி,
நீராடப் புறப்பட்ட
       நீளலைகள் என்றுநம்
       நெஞ்சம் விம்மத்
தேராடும் கொடியாடத்
       திரள்கின்றோம் பகைக்காளான்
       சிதறி ஓட,
ஊராட உணர்வெல்லாம்
       கூத்தாட நம்கைகள்
       உயர்க இன்றே!

‘தமிழர் நாடு’ - 1960