பக்கம் எண் :

132மலரும் உள்ளம்

பையன்

பழங்கள் நிறையத் தருகிறேன்!
பசியைத் தீர்க்க வா, வா.
துளியும் கெடுதல் செய்திடேன்.
துணிந்தே அருகில் வா, வா.

பச்சைக் கிளி

பறந்து சென்று வேண்டிய
பழங்கள் தின்பேன் போ, போ.
பிறரின் கையைப் பார்த்துநான்
பிழைப்ப தில்லை போ, போ.