பக்கம் எண் :

136மலரும் உள்ளம்

பூனை - 
     
     
     
     
எலி - 
     
     
     
     
பூனை - 
     
     
     
     
எலி - 
     
     
     
     
பூனை - 
     
     
     
என்ன செய்வேன்? இந்தப் பொந்தோ
   சின்னஞ் சிறியது.
என்னி டத்தில் இருக்கும் பண்டம்
   மிகவும் பெரியது.

பிட்டுப் பிட்டுச் சிறிது சிறிதாய்
   எனது வளையிலே
போட்டு விட்டுப் போக லாமே
   பூனை நண்பரே.

கல்லைப் போலக் கடின மாகப்
   பண்டம் இருப்பதால்,
கடித்துக் கொறிக்கும் சக்தி உன்போல்
   எனக்கும் இல்லையே!

இல்லை யானால், தொல்லை யில்லை.
   வளையின் வாயிலே
இனிப்புப் பண்டம் அதனைப் போட்டுச்
   செல்வீர் நண்பரே.

வளையின் அருகே போட்டுச் சென்றால்
   என்ன ஆகுமோ?
வட்ட மிட்டுத் திரியும் காகம்
   விட்டு வைக்குமோ?