பக்கம் எண் :

மலரும் உள்ளம்155

பொக்கை வாயைத் திறந்து காந்தி
   புன்சி ரிப்பு சிரித்தார்.
“மிக்க நல்ல பென்சில் இதனை
   விடவே மனமும் வருமோ?

சென்னை நகரில் இருந்த போது 
   சின்னப் பையன் ஒருவன்,
அன்ப ளிப்பாய்த் தந்த திந்த
   அருமைப் பென்சில்!” என்றார்.

("இந்தியன் ரெவ்யூ" என்ற பத்தரிகையை நடத்தியவரும், பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவருமாகிய காலஞ் சென்ற ஜி.ஏ.நடேசன் அவர்களின் புதல்வனே அந்தச் சிறுவன்.)