பக்கம் எண் :

156மலரும் உள்ளம்

தாத்தாவின் கோபம்

காசிக்குத் தாத்தாவும் சென்றுவந்தார் - உடன்
   களிப்போடு பிள்ளைகள் சூழ்ந்துகொண்டார்.
ஆசையாய்க் கூடியே பேசுகையில் - அங்கே
   ஆனந்தன் தாத்தாவைக் கேட்கலுற்றான்.

“அத்தையும் காசிக்குச் சென்றுவந்தாள் - இனி
   அவரைக்காய் தின்பதே இல்லையென்றாள்.
சித்தப்பா காசிக்குச் சென்றுவந்தார் - இனி 
   சிகரெட் பிடிப்பதே இல்லையென்றார்.

பாட்டியும் காசிக்குச் சென்றுவந்தாள் - இனி
   பாகற்காய் தின்பதே இல்லையென்றாள்.
சீட்டாடும் பழக்கத்தை விட்டேனென்றார் - காசி 
   சென்று திரும்பிய மாமாவுமே.

இப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம் - அங்கே 
   ஏதேனும் ஒன்றினை விட்டுவந்தார்.
அப்படி நீயுமே விட்டதென்ன? - தாத்தா.
   அவசியம் கூறிட வேண்டு”மென்றான்.