“கோபக்காரன் என்றே
ஊரிலுள்ளோர் - என்னைக்
கூறிடு
வாரன்றோ? ஆதலினால்,
கோபத்தைக் காசியில் விட்டுவந்தேன்” - என்றே
கூறினர்
மறுமொழி தாத்தாவுமே.
கண்ணனும் உடனேயே, “தாத்தா, தாத்தா நீயும்
காசியில்
விட்டதும் என்ன?” என்றான்.
“இந்நேரம் கோபத்தை விட்டதாய்ச் சொன்னேனே.
எங்கே
கவனமோ?” என்றுரைத்தார்.
முரளியும், “தாத்தா, நீ விட்டதென்ன?” - என்றே
மீண்டும் ஒருமுறை
கேட்டிடவே.
திரும்பவும், “கோபத்தை விட்டே” னென்றே-தாத்தா
செப்பினர். முரளியும், “ஓகோ”
என்றான்.
அருணனும் கோபுவும் அழகப்பனும் - இன்னும்
அலமுவும்
கீதா காவேரியுமே
திரும்பத் திரும்பஇக் கேள்விதனைக் - கேட்கச்
சீறி
எழுந்தனர் தாத்தாவுமே!
“வேலையற்ற வெட்டிப் பிள்ளைகளா - என்ன
வேடிக்கையா
இங்கே காட்டுகிறீர்?
தோலை உரித்தே எடுத்திடுவேன்” -என்று
சொல்லியே
கையில் தடிஎடுத்தார்.
|