பக்கம் எண் :

16மலரும் உள்ளம்

வாழை மரம்

வாழைமரம் வாழைமரம்
வழவழப்பாய் இருக்கும் மரம்.

சீப்புச்சீப்பாய் வாழைப்பழம் 
தின்னத்தின்னக் கொடுக்கும் மரம்.

பந்திவைக்க இலைகளெலாம்
தந்திடுமாம் அந்த மரம்.

காயும்பூவும் தண்டுகளும் 
கறிசமைக்க உதவும் மரம்.

கலியாண வாசலிலே
கட்டாயம் நிற்கும் மரம்!