பக்கம் எண் :

மலரும் உள்ளம்15

வீடு எங்கே?

வண்ணக் கிளியே, வீடெங்கே ?
மரத்துப் பொந்தே என்வீடு.

தூக்கணங் குருவி, வீடெங்கே ?
தொங்குது மரத்தில் என்வீடு.

கறுப்புக் காகமே, வீடெங்கே ?
கட்டுவேன் மரத்தில் என்வீடு.

பொல்லாப் பாம்பே, வீடெங்கே ?
புற்றும் புதருமே என்வீடு.

கடுகடு சிங்கமே, வீடெங்கே ?
காட்டுக் குகையே என்வீடு.

நகரும் நத்தையே, வீடெங்கே ?
நகருதே என்னுடன் என்வீடு.