பற்றிப் படரக் கொம்பில் லாமல்
முல்லைக் கொடியுமே - காற்றில்
சுற்றிச் சுழன்று தவிக்கும் காட்சி
கண்டு தானடி.
தேரைக் கொடியின் அருகில் கொண்டு
செல்வ தேனடி? - அங்கே
சென்று கொடியைக் கையில் அவரும்
எடுப்ப தேனடி?
தேரின் மீது கொடியைப் படர
விடுகி றாரடி - அதன்
சிரமம் தீர்த்து மகிழ்ச்சி யோடு
நடக்கி றாரடி.
முல்லை படரத் தேரைக் கொடுத்த
வள்ளல் பாரிபோல் - அடியே,
மிகவும் நல்ல மனிதர் ஒருவர்
உண்டோ? சொல்லடி.
இல்லை, இல்லை, இல்லை என்றே
சொல்கி றேனடி - நாம்
எங்கு தேடிப் பார்த்திட் டாலும்
கிடைத்தி டாரடி!
|