பக்கம் எண் :

182மலரும் உள்ளம்

பற்றிப் படரக் கொம்பில் லாமல்
   முல்லைக் கொடியுமே - காற்றில் 
சுற்றிச் சுழன்று தவிக்கும் காட்சி
   கண்டு தானடி.

தேரைக் கொடியின் அருகில் கொண்டு
   செல்வ தேனடி? - அங்கே
சென்று கொடியைக் கையில் அவரும்
   எடுப்ப தேனடி?

தேரின் மீது கொடியைப் படர
   விடுகி றாரடி - அதன்
சிரமம் தீர்த்து மகிழ்ச்சி யோடு
   நடக்கி றாரடி.

முல்லை படரத் தேரைக் கொடுத்த 
   வள்ளல் பாரிபோல் - அடியே,
மிகவும் நல்ல மனிதர் ஒருவர் 
   உண்டோ? சொல்லடி.

இல்லை, இல்லை, இல்லை என்றே 
   சொல்கி றேனடி - நாம்
எங்கு தேடிப் பார்த்திட் டாலும் 
   கிடைத்தி டாரடி!