தேர் கொடுத்தவர்
முத்து, பவளம், மணி இழைத்த
தேரைப் பாரடி - அதில்
மிடுக்குடனே செல்லும் அந்த
மனிதர் யாரடி?
எத்தி சையும் புகழ் மணக்கும்
பாரி தானடி - அவர்
இல்லை யென்றே சொல்லி டாத
வள்ள லாமடி.
சாலை ஓரம் அந்தத் தேரும்
நிற்ப தேனடி? - அங்கே
சட்டென் றவரும் கீழி றங்கிப்
பார்ப்ப தென்னடி?
மாலைக் காற்றில் ஆடி அசையும்
முல்லைக் கொடியடி - அதை
வழியில் கண்டே வேக மாக
இறங்கி னாரடி.
உற்றே அந்தக் கொடியை அவரும்
பார்ப்ப தேனடி? - அவர்
உள்ளம் நொந்து முகமும் வாடி
நிற்ப தேனடி?
|