பக்கம் எண் :

மலரும் உள்ளம்181

தேர் கொடுத்தவர்

முத்து, பவளம், மணி இழைத்த
   தேரைப் பாரடி - அதில் 
மிடுக்குடனே செல்லும் அந்த 
   மனிதர் யாரடி?
எத்தி சையும் புகழ் மணக்கும்
   பாரி தானடி - அவர்
இல்லை யென்றே சொல்லி டாத
   வள்ள லாமடி.

சாலை ஓரம் அந்தத் தேரும் 
   நிற்ப தேனடி? - அங்கே
சட்டென் றவரும் கீழி றங்கிப் 
   பார்ப்ப தென்னடி?
மாலைக் காற்றில் ஆடி அசையும் 
   முல்லைக் கொடியடி - அதை 
வழியில் கண்டே வேக மாக 
   இறங்கி னாரடி. 

உற்றே அந்தக் கொடியை அவரும் 
   பார்ப்ப தேனடி? - அவர்
உள்ளம் நொந்து முகமும் வாடி 
   நிற்ப தேனடி?