பக்கம் எண் :

180மலரும் உள்ளம்

பட்டுப் புடவையும் அங்குஇல்லை;
   பாத்திர பண்டமும் அங்குஇல்லை;
பொட்டணத் துள்ளே இருந்ததெல்லாம்
   புத்தகம், புத்தகம், புத்தகமே!
அரசர் கொடுத்தது ஐந்துநூறு.
   அத்தொகை யாவுமே புத்தகமாய்
இருப்ப தறிந்ததும், “ஐயையோ,
   ஏனோ இப்படிச் செய்துவிட்டீர்!

எனக்குப் பிடித்ததாய் ஏதுமில்லை,
   இப்படிக் காசைக் கெடுப்பதுவோ?”
சினத்துடன் மனைவி பேசிடவே,
   சிரித்துமே பாரதி கூறினரே:

“பட்டுப் புடவை, வெள்ளியிலே
   பாத்திரம், பண்டங்கள் வாங்காமல்,
பட்டணம் சென்றே வீணாகப் 
   பணத்தைக் கொடுத்ததாய் எண்ணுகிறாய்.

அழிகின்ற செல்வம் நான்கொடுத்தே
   அழியாத செல்வம் கொண்டுவந்தேன்.
அழகழ கான கருத்தையெல்லாம்
   ஆனந்த மாகப் படித்தறிவோம்.”