பக்கம் எண் :

186மலரும் உள்ளம்

“ஐயோ, குளிர்மிக வீசுவதால் - இந்த 
   ஆண்மயில் மேனி நடுங்குதம்மா!
"ஐயா, உதவுங்கள்" என்கிறதோ - மயில்?
   ஆமாம், அதைத்தான் உரைக்கிறது”.

எண்ணினன் இப்படி மன்னனுமே - உடன்
   எடுத்தனன் போர்த்திய போர்வையினை.
சென்றனன் அந்த மயிலருகே - உள்ளம் 
   திருப்தி அடைந்திடப் போர்த்தினனே.

உடலும் மழையால் குளிர்ந்திடவே - அவன் 
   உள்ளம் கொடையால் குளிர்ந்ததுவே.
கொடையில் சிறந்தோன் பெயர்சொல்லவா? - மக்கள்
   கொண்டாடும் பேகன் அவனல்லவா!

பேகன் கடையேழு வள்ளல்களில் ஒருவர், பழனி மலையையும் அதையடுத்த ஊர்களையும் ஆண்டு வந்தவர்.