“ஐயோ, குளிர்மிக வீசுவதால் - இந்த
ஆண்மயில் மேனி நடுங்குதம்மா!
"ஐயா, உதவுங்கள்" என்கிறதோ - மயில்?
ஆமாம், அதைத்தான் உரைக்கிறது”.
எண்ணினன் இப்படி மன்னனுமே - உடன்
எடுத்தனன் போர்த்திய போர்வையினை.
சென்றனன் அந்த மயிலருகே - உள்ளம்
திருப்தி அடைந்திடப் போர்த்தினனே.
உடலும் மழையால் குளிர்ந்திடவே - அவன்
உள்ளம் கொடையால் குளிர்ந்ததுவே.
கொடையில் சிறந்தோன் பெயர்சொல்லவா? - மக்கள்
கொண்டாடும் பேகன் அவனல்லவா!
பேகன் கடையேழு வள்ளல்களில் ஒருவர், பழனி மலையையும் அதையடுத்த ஊர்களையும் ஆண்டு வந்தவர்.
|