மயிலுக்குப் போர்வை
இயற்கை அழகினைக் கண்டுகண்டு - பெரும்
இன்ப மடைந்திடும் ஓர்அரசன்
உயர்ந்த மலைகளைக் கண்டிடவே- மிக
உல்லாச மாகக் கிளம்பினனே.
மலைவளம் கண்டு வருகையிலே - அங்கு
மடமட வென்று மழைபொழிய
பலகிளை உள்ள மரத்தடியில் - சென்று
பதுங்கினன் அந்த அரசனுமே.
பயத்தால் உடலும் நடுங்குதல்போல் - குளிர்
பரவிட மன்னன் நடுங்கினனே.
உயர்ந்த மதிப்புள்ள போர்வையினால் - நன்றாய்
உடம்பை இறுகவே மூடினனே.
மேகங்கள் கூடிடக் கண்டதுமே - அங்கு
வேகமாய் ஓர்மயில் ஓடிவந்தே,
தோகை விரித்துநின் றாடியதே - மேலும்
தொண்டையைத் தூக்கி அகவியதே!
|