பக்கம் எண் :

4மலரும் உள்ளம்

பசுவே

பசுவே, பசுவே, உன்னைநான்
பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.

வாயால் புல்லைத் தின்கின்றாய்.
மடியில் பாலைச் சேர்க்கின்றாய்.

சேர்த்து வைக்கும் பாலெல்லாம்
தினமும் நாங்கள் கறந்திடுவோம்.

கறந்து கறந்து காப்பியிலே
கலந்து கலந்து குடித்திடுவோம்.