பசுவே
பசுவே, பசுவே, உன்னைநான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். வாயால் புல்லைத் தின்கின்றாய். மடியில் பாலைச் சேர்க்கின்றாய்.
சேர்த்து வைக்கும் பாலெல்லாம் தினமும் நாங்கள் கறந்திடுவோம். கறந்து கறந்து காப்பியிலே கலந்து கலந்து குடித்திடுவோம்.